Uncategorized

Poovodu..,

  பூவொடு நீர்சுமந்து ஏத்தி! அன்பு செலுத்துவதற்கு ஒர் உருவம் அவசியம் என்பதைக் கண்டு காட்டியவர் காரைக்கால் அம்மையார் ஆவார். சங்கமருவிய காலத்துடன் தோற்றம் பெற்ற இந்துசமயச் சுருவவழிபாட்டு இறைவணக்கத்தில் ஆண்டவனை வழிபடுவதற்குப் பூவும், நீருமே மூலாதாரம் என்று காரைக்கால் அம்மையார் தனது பாடல்களில் குறிப்பிட்டதை அதன்பின்வந்த சமயகுரவர்களும் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) கடைப்பிடித்தார்கள் என்பதை அவர்களிது பாடல்களில் இருந்தே நாம் பார்க்கலாம். ஒருவனுக்குப் புண்ணியம் என்பது பலவழிகளில் வந்து சேரும். போதொடு நீர் சுமந்தேத்தி …

Poovodu.., Read More »

Thiruvembavai

http://sivasiva.dk/wp-content/uploads/2022/09/padal.mp3 திருவெம்பாவை ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னேஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய் 1 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் …

Thiruvembavai Read More »

Alankaram

http://sivasiva.dk/wp-content/uploads/2022/10/alankaram.mp3 அருணகிரி நாதர் அருளிச் செய்த கந்தர் அலங்காரம். காப்பு அடலரு ணைத்திருக் கோபுரத் தேய்ந்த வாயிலுக்குவடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் — 1 — பேற்றைத் தவஞ்சற்று மில்லாத என்னைப்ரபஞ்சமென்னுஞ்சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை அம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே— 2 — அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றி …

Alankaram Read More »

Kanthasasdi

http://sivasiva.dk/wp-content/uploads/2022/09/kanthasasdy.mp3 கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் நேரிசை வெண்பாதுதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பாஅமரரிடர் தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி… நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை …

Kanthasasdi Read More »

Theedchai

சமய தீட்சை டென்மார்க் வாழ் சைவப் பெருமக்களே!டென்மார்க் சைவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பெருமுயற்சியினாலும் கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பேராதரவுடனும் வருகின்ற 19-11-2022 சனிக்கிழமை கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் சமய தீட்சை வழங்கும் வைபவம் நிகழ எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.வயது வித்தியாசமின்றி ஆண்கள் பெண்கள் அனைவரும் (7வயது முதல்) தீட்சை பெறமுடியும். எனவே இதுவரை தீட்சைபெறாத சைவப்பெருமக்கள் இந்நிகழ்வை ஒரு வரப்பிரசாதமாக எண்ணிஇ தீட்சை பெற்று எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம். சைவ …

Theedchai Read More »

Thiruppavai

ஆண்டாள் அருளிய திருப்பாவை மார்கழித் திங்கள் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா …

Thiruppavai Read More »

Pajanai

பஜனை விநாயகர் பஜனை 1. கணபதி ஓம் ஜய கணபதி ஓம்கஜமுக ஐங்கர கணபதி ஓம்குணபதி யாம்சிவ கணபதி ஓம்குண்டலி மண்டல கணபதி ஓம் (கணபதி ஓம்) மூசிக வாகன கணபதி ஓம்மூலக் பிரவாகன கணபதி ஓம்மாசுர தேசித கணபதி ஓம்வல்லப மோகன கணபதி ஓம் (கணபதி ஓம்) விக்ன விநாயக கணபதி ஓம்விகசிக நதமுக கணபதி ஓம்உத்ர தபகோபால கணபதி ஓம்உத்துவ நாதன கணபதி ஓம் (கணபதி ஓம்) கணபதி ஓம் ஜய கணபதி ஓம்பார்வதி …

Pajanai Read More »

gowrikappu

http://sivasiva.dk/wp-content/uploads/2022/10/Kethara-Gowri-Kappu-கேதார-கௌரி-காப்பு.mp3 கௌரி விரத பாடல் காப்பு  முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்குஎன்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்எக்குற்றமும் வாராமற்கா. வேண்டுதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்.   பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்.   காளிமகா தேவியரே காப்பெனக்குத் …

gowrikappu Read More »

GowriViratham

 கேதார கௌரி விரதம் சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. …

GowriViratham Read More »